தமிழ் கனவு – தமிழ் மரபு பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி
தமிழ் கனவு தமிழ் மரபு பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி
திருச்சி, ஆக.11 திருச்சி தேசிய கல்லூரியில் தமிழ் இணையக்கல்விக் கழகத்தின் சார்பில் மாபெரும் தமிழ் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கலந்து கொண்டு தமிழ்நாடு நேற்று இன்று நாளை என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்றினார். இந்நிகழ்வில் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் குணசேகன், தேசிய கல்லூரி முதுல்வர் கி.குமார், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.