சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது
திருச்சி, ஜூன் 30 திருச்சி மாவட்டம், மணப்பாறை போலீசாரின் ரோந்து பணியின் போது மறவனூர் மற்றும் கல்பாளையத்தான்பட்டி ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலின் பெயரில் சோதனை நடத்தியதில் கல்பாளையாத்தான்பட்டி பகுதியில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த விராலிமலை அருகே உள்ள கோடாலிகுடியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி (வயது 30), அதேபோல் மறவனூர் பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட இனாம்குளத்தூர், ஆவரங்காடு பகுதியைச் சேர்ந்த முத்துக்கண்ணு (வயது 54) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.