காய்கறி- பழங்கள் விற்பனை வண்டி : அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார்
திருச்சி, அக்.18 தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறையின் சார்பாக, தேசிய தோட்டக்கலை இயக்கம் 2025-26, 125 நபர்களுக்கு நடமாடும் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை வண்டியை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பொதுமக்களுக்கு வழங்கினார்.
திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சுமார் 125 நபர்களுக்கு தேசிய தோட்டக்கலை மற்றும் மழை பயிர்கள் துறையின் சார்பாக காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை வண்டியை பொதுமக்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்வில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மாநகர செயலாளர் மு.மதிவாணன் கோட்டத் தலைவர் ஜெயநிர்மலா, பகுதிச் செயலாளர் மோகன் தோட்டக்கலைத் துறையின் அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பயனாளிகள் கலந்து கொண்டனர்.