வயிற்று வலியால் அவதி: பெண் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி, பிப். 13 புத்தாநத்தம் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி மாவட்டம் புத்தாநத்தம் அடுத்த மணியங்குறிச்சி அருகே ஆலம்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி செல்வி (45). இரு வருக்கும் திருமணமாகி 25 வருடங்கள் ஆகின்றன. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சோதித்து வந்துள்ளார். நிலையில் செல்விக்கு அடிக்கடி உடல் நிலையில் பிரச்சனை ஏற்பட்டு மருத்துவமனையில் பரிசோதனை
இந்நிலையில் அவருக்கு மீண்டும், மீண்டும் வயிற்று வலி ஏற்படவே சிகிச்சை பெற்று
வந்துள்ளார். நேற்று காலை அவரது வீட்டில் அவரது சேலையால் தூக்கில் தொங்கியுள்ளார். இதைக் கண்ட அவரது மூத்த மகன் நந்தகுமார் உடனடியாக உறவினர் மற்றும் புத்தாநத்தம் காவல்துறை யினருக்கு தகவல் அளித் துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த புத்தாநத்தம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச் சம்பவம் குறித்து புத்தாநத்தம் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்