திருச்சியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து DYFI அமைப்பினர் நூதன போராட்டம்
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று திருச்சி மாவட்டம் திருவானைக்காவில் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பாக DYFI அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய பாஜக அரசை கண்டித்தும் இன்று திருவானைகோவில் பெட்ரோல் பங்கு முன்பாக இருசக்கர வாகனத்திற்கு இறுதி சடங்கு நிகழ்த்தும் வண்ணம் மாலை அணிவித்து, சங்கு ஊதி, கொள்ளிசட்டி ஏந்தி DYFI அமைப்பினர் கண்டன போராட்டம
மேலும் இந்த போராட்டத்திற்கு ஸ்ரீரங்கம் பகுதி DYFI சார்பாக தலைவர் தோழர் சந்துரு, மாவட்டத் தலைவர் S.சுரேஷ், மாவட்ட பொருளாளர் B.ஜெய்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.