மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு 4 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய கரூர் எம்.பி.ஜோதிமணி.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கொரோனா வார்டு தொடங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராஜிவ் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு கரூர் எம்.பி.ஜோதிமணி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு 4 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கினார். மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் முத்துகார்த்திகேயனிடம் வழங்கிய எம்.பி., மருத்துவமனைக்கு இன்னும் உள்ள தேவைகள் என்ன என்பதையும் கேட்டறிந்தார். இதே போல் இம்மருத்துவமனைக்கு தனியார் அறக்கட்டளை சார்பில் மேலும் 2 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டது.