திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய https://chat.whatsapp.com/Lsr0mGx2BtcHISoYvuFdGy
திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்.ஐ.டி) காலியாக உள்ள 92 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வருகின்ற 15ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
ஆர்க்கிடெக்சர், கெமிக்கல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியர், கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியர், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்கல் இன்ஜினியரிங் ஆகிய துறைகளில் காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும், இதற்கு பி.இ, பி.டெக், எம்.டெக் போன்ற முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
எஸ்சி எஸ்டி பிரிவினர் 500 ரூபாய் மற்ற பிரிவினர் ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை. ஸ்க்ரீன் டெஸ்ட், பிரசண்டேஷன் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
www.nitt.edu என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து The Register, National institute of technology, tiruchirappalli -620015, tamilnadu என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்றும், ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் வருகின்ற 24ம் தேதி ஆகும்.
https://recruitment.nitt.edu/faculty2021/advt/1.a_General%20Information.pdf