மக்கள் பணியில் 43ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் செந்தில்
மக்கள் போற்றும் மகேஸர்”மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் அவர்கள் இன்று தனது 43-ஆவது வார்டுக்குட்பட்ட பகுதிகளில், பர்மா காலனி நேதாஜி சாலையில் தண்ணீர் குழாய் உடைந்து குடிதண்ணீர் வீணாவதை தடுக்கும் விதமாக சரி செய்யும் பணியையும், காவேரி நகரில் நடைபெறும் பாதாள சாக்கடை பணியையும், காவேரி நகர், வள்ளுவர் தெரு ஆகிய இடங்களில் தெரு விளக்கு எரியாததை சரி செய்யும் பணியையும், தெற்கு காட்டூர் கம்பர் தெருவில் நேற்றிரவு பெய்த மழையின் போது மெயின் மின்கம்பி அறுந்து விழுந்த தகவல் அறிந்தவுடன் மாமன்ற உறுப்பினர் உடனடியாக மின் ஊழியர்களுக்கு தகவல் கொடுத்து வரவழைத்து எவ்வித சேதாரமுமின்றி கொட்டும் மழையிலும் நின்று சரி செய்யும் பணியையும், தெற்கு காட்டூர் பிள்ளையார் கோயில் தெருவில் சாலையை சுத்தம் செய்தல் பணியையும், தெற்கு காட்டூர் சீதக்காதி தெருவில் சாலை மிகவும் மோசமாக உள்ளதையும், அந்தோனியார் கோயில் தெருவில் சாலை மிகவும் மோசமாக உள்ளதையும், ,பிலோமினாள் புரம் சிஸ்டர் கள் கான்வெண்டில் சாக்கடை அடைத்து கொண்டுள்ளதையும், காந்தி சாலையில் சாக்கடை கல்வெட்டு பாலம் கட்டும் பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
