“குட்கா” விற்றவர் போலீசில் சிக்கினார்!
திருச்சி மாவட்டம் முசிறி காந்தி நகர் காலேஜ் ரோடு 4வது தெருவைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன்(வயது 60). இவர் தனது வீடு அருகில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்வதாக முசிறி
போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தபோது, பான்மசாலா உள்ளிட்டவை இருப்பது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.