கெத்து காட்டிய எம்.எல்.ஏ.வின் காளை!
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே கலிங்கப்பட்டியில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் ஶ்ரீரங்கம் திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டியின் காளையும் பங்கேற்றது. வாடிவாசலில் இருந்து வெளியே
வந்ததும் தன்னை அடக்கவந்த வீரரை கொம்புகளால் தூக்கி வீசியது. அருகில் யாரையும் விடாமல் களத்தில் கெத்து காட்டி மிரட்டிய நிலையில் இரண்டாவதாக அடக்க வந்த மற்றொரு வீரரையும் பறக்கவிட்டதால் ஜல்லிக்கட்டு களம் மக்களின் ஆரவாரத்தால் களைகட்டியது.