திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- சுதந்திர தின அரசு விடுமுறையை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மூடப்பட்டு இருக்கும்.
மேலும், அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்களும் மதுபானம் விற்பனை இன்றி மூடப்பட்டு இருக்கும். எனவே அன்றைய தினம் விதிமுறைகளை மீறி மதுபானம் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் அதில் கூறிஉள்ளார்.