கோவில் சிலைகளை கேட்டு மறியல்
திருச்சி திருவனை கோவில் அருகே உள்ள கிளிகூடு கிராமத்திற்கு சொந்தமான அரசாலா அம்மன் சிலையை வைத்துக் கொண்டு உத்தமர்சீலி மக்கள் தரவில்லை எனக் கூறி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவனை கோவில் அருகே உள்ள கிளிக்கூடு கிராமத்திற்கு சொந்தமான அரசால அம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவில் சிலையை வைத்து கிளிக்கூடு, கவுத்தரசநல்லூர், உத்தமர்சீலி ஆகிய ஊர்களில் நடைபெறும் திருவிழாவிற்கு எடுத்துச்செல்வது வழக்கம்.
இந்த நிலையில் உத்தமர்சீலி கிராமத்தினர் கடந்த ஒன்று மற்றும் இரண்டாம் தேதி செல்லாயி அம்மன் கோவில் திருவிழா நடத்துவதற்காக கடந்த மாதம் 15ஆம் தேதியே பவுர்ணமி தினத்தன்று அரசால அம்மன் கோவில் சிலை இரவல் வாங்கி திருவிழாவில் நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில் கிளிகூடு கிராமத்தினர் தங்களது ஊரில் திருவிழா நடத்த வேண்டுமென திட்டமிட்டு 12ம் தேதி முதல் 14 ஆகிய 3 தினங்களில் திருவிழா நடத்துவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
அதற்காக தங்கள் ஊரில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட அரசல அம்மன் சிலையை கேட்டு கடந்த 5ம் தேதி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மேளதாளங்கள் முழங்க உத்தமர்சீலி கிராமத்திற்குச் சென்று அரசால அம்மன் சிலையை கிளிக்கூடு கிராம மக்கள் கேட்டதாகவும் ஆனால் உத்தமர்சீலி கிராம மக்கள் அரசால அம்மன் சிலையைகொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மீண்டும் உத்தமர்சீலி மக்கள் கிளிக்கூடு கிராமத்தினரை வந்து சிலையை பெற்று செல்லுமாறு கூறியதை தொடர்ந்து நேற்றும் கிளிக்கூடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் உத்தமர்சீலி கிராமத்திற்கு சென்று தங்களுக்கு சொந்தமான அரசால அம்மன் சிலையை கேட்டதாகவும்
அப்பொழுது உத்தமர்சீலியினர் கனத்தரசநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட நல்லேந்திர கருப்பு சிலையும் கிளிக்கூடு திருவிழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கவுத்தரசநல்லூர் கிராமத்தினர் தங்கள் ஊரில் நல்லேந்திர கருப்பிற்கு காவு கொடுத்த பிறகு வழங்கப்படும் என்று கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் உத்தமர்சீலி அரசால அம்மன் சிலையை கொடுக்கவில்லை இதனால் ஆத்திரம் அடைந்த கிளிக்கூடு கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் கல்லணை திருவனைகோவில் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு சமயபுரம் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் உடனடியாக அரசால அம்மன் சிலையை கொண்டு வந்து தருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து சாலைமறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
இதனால் சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக கல்லணை திருவனைகோவில் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து உத்தமர்சீலி கிராமத்தில் உள்ள கேட்டபோது நாங்கள் சிலையை தரவில்லை என்று கூறவில்லை கவுத்தரசநல்லூர் சேர்ந்தவர்கள் தான் நல்லேந்திர கருப்பிற்கு திருவிழாவின் முன்பாக காவு கொடுக்க வேண்டும் என்றும் அதன்பிறகு சாமியை வழங்குவதாக கூறியதாகவும் அதற்கு அவர்கள் கோபித்துக் கொண்டு சென்று விட்டு தற்போது சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.