திருச்சி குரு கார்டன் குடியிருப்போர் நல சங்கம் சார்பாக 75வது சுதந்திர தின விழா திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் சமூக இடைவெளியை பின்பற்றி கொண்டாடப்பட்டது. சங்கத்தின் சார்பாக விஜயலக்ஷ்மி ராஜேந்திரன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் குரு கார்டன் குடியிருப்போர் நலசங்க தலைவர் ராஜேந்திரன், செயலாளர் ரபீக், பொருளாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.