சீக்கிரம் நிறைவேற்றுங்கள் : பட்டியல் அளித்தார் எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களிடம் தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள 10 பணிகள் குறித்து பட்டியல் தயாரிக்குமாறு அறிவுறுத்தினார். இந்நிலையில் திருச்சி கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் தமிழ்நாட்டிலேயே முதல் ஆளாக திருச்சி கிழக்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நீண்டநாட்களாக தீர்க்கப்படாமல் இருக்கின்ற மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையாரை வயதானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் சிரமமின்றி தரிசிக்க ரோப்கார்,தங்கு தடையற்ற குடிநீர், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பது உட்பட்ட தலைப்புகளில் முக்கியக் கோரிக்கைகளை முன்னுரிமை அடிப்படையில் பரிந்துரைத்து
பட்டியலை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமாரிடம் அளித்தார். உடன் மாமன்ற 3வது மண்டல குழுத் தலைவர் மதிவாணன் உடன் உள்ளார்.