கழக புதிய நிர்வாகிகள் அமைச்சரிடம் வாழ்த்து பெற்றனர்
திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில், திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களை 15’வது அமைப்பு கழக தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டு, தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்ட திருச்சி கிழக்கு மாநகர புதிய கழக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்.
கிழக்கு மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன் தலைமையில் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கிழக்கு நகரக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பிரதிநிதிகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்