கொள்ளிடம் பஞ்சகரை சாலையில் கொட்டப்படும் குப்பைகள் துர்நாற்றம்
ஸ்ரீரங்கத்தில் இருந்து வண்ணத்துப்பூச்சி பூங்காவிற்கு செல்வதற்கு கொள்ளிடம் பஞ்சகரை சாலை புதிதாக கடந்த மாதம் போடப்பட்டது. சாலை போடப்பட்டு ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் ஸ்ரீரங்கம்வடக்கு வாசல் பகுதியில் சாலையிலேயே குப்பைகளை லாரி லாரி ஆக கொட்டி செல்கின்றனர் இதனால் இப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர் துர்நாற்றம் வீசுகிறது. வெளியூரில் இருந்து வண்ணத்துப்பூச்சி பூங்காவிற்கு செல்பவர்கள் நடு ரோட்டிலே குப்பைகள் கிடப்பதால் சாலையை கடப்பதற்கு ரொம்ப சிரமமாகவே இருக்கிறது.