வாழவந்தான்கோட்டை பகுதியில் நாளை மின்தடை…
திருச்சி வாழவந்தான் கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை (20.09.2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை காலை 9:45 மணி முதல் பகல் 2 மணி வரை ஜெய் நகர் திருவேங்கடநகர், கணேசபுரம், கணபதி நகர், பெல் டவுன்ஷிப் செக்டர், சொக்கலிங்கபுரம், இம்மானுவேல் நகர், வ.உ.சி நகர், எழில் நகர், அய்யம்பட்டி, வாழவந்தான் கோட்டை, வாழவந்தான் கோட்டை சிட்கோ தொழிற்சாலை, திருநெடுங்குளம், தொண்டைமான் பட்டி, பெரியார் நகர், ரெட்டியார் தோப்பு, ஈச்சங்காடு, பர்மா நகர், மாங்காவனம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நாளை (20.09.2022) மின்விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.