முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் – மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
திருச்சிராப்பள்ளி மன்னார்புரம், செங்குளம் காலனியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் வழங்கப்படுவதை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் பொதுப்பணித்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர்.க. மணிவாசன் இன்று (21.9.22) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வின் போது மாவட்ட ஆட்சித் தலைவர்மா.பிரதீப் குமார், , மாநகராட்சி ஆணையர் டாக்டர். ஆர் வைத்திநாதன் ஆகியோர் உடனிருந்தனர்