திருச்சி மாநகர் புறநகர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்

0 671
Stalin trichy visit

சமயபுரம், திருவானைக்காவல், மன்னார்புரம், குணசீலம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

திருவானைக்காவல்

ஸ்ரீரங்கம் கோட்டத்துக்குட்பட்ட திருவானைக்காவல் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி திருவானைக்காவல் சன்னதிவீதி, வடக்கு உள்வீதி, தெற்கு உள்வீதி, ஒத்தத்தெரு, சீனிவாசநகர், நரியன்தெரு, நெல்சன்ரோடு, அம்பேத்கார்நகர், பஞ்சக்கரைரோடு, அருள்முருகன் கார்டன், ஏ.யு.டீ.நகர், ராகவேந்திராகார்டன், காந்திரோடு, டிரங்க்ரோடு, கும்பகோணம்சாலை, சிவராம்நகர், எம்.கே.பேட்டை, சென்னை பைபாஸ்ரோடு, கல்லணைரோடு, கீழகொண்டையம்பேட்டை, நடுகொண்டையம்பேட்டை, ஜெம்புகேஸ்வரர்நகர், அகிலாண்டேஸ்வரிநகர், வெங்கடேஸ்வராநகர், தாகூர்தெரு, திருவெண்ணைநல்லூர், பொன்னுரங்கபுரம், திருவளர்ச்சோலை, பனையபுரம், உத்தமர்சீலி, கிளிக்கூடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

சமயபுரம்
இதேபோல் சமயபுரம் துணை மின் நிலையத்து உட்பட்ட சமயபுரம், மண்ணச்சநல்லூர் ரோடு, வெங்கங்குடி, வ.உ.சி.நகர், பூங்கா, எழில் நகர், காருண்யா சிட்டி, மண்ணச்சநல்லூர், இருங்களூர், கல்பாளையம், கொணலை, மேலசீதேவிமங்கலம், புறத்தாக்குடி, கரியமாணிக்கம், தெற்கு எது மலை, பாலையூர், வலையூர், கன்னியாகுடி, ஸ்ரீபெரும்புதூர், கூத்தூர், நொச்சியம், பளூர், சங்கர் நகர், பாச்சூர், தாளக்குடி, நாராயணன் கார்டன், பரஞ்சோதி நகர், மாருதி நகர், கீரமங்கலம், உத்தமர்கோவில், பிச்சாண்டார்கோவில், திருவாசி, குமரகுடி, பணமங்கலம், எடையபட்டி, அய்யம்பாளையம், தத்தமங்கலம், தழுதாளப்பட்டி, சிறுகுடி, வீராணி, சிறுப்பத்தூர், தேவிமங்கலம், அக்கரைப்பட்டி, வங்காரம், ஆய்குடி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

மன்னார்புரம்
திருச்சி மன்னார்புரம் துணை மின் நிலையத்தில் தவிர்க்க முடியாத அவசரகால பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை காலை 9.15 மணி முதல் மாலை 5 மணி வரை மன்னார்புரம் டி.வி.எஸ்., டோல்கேட், உலகநாதபுரம், என்.எம்.கே.காலனி, சி.எச் காலனி, உஸ்மான்அலிதெரு, சேதுராமன்பிள்ளை காலனி, ராமகிருஷ்ணாநகர், முடுக்குப்பட்டி, கல்லுக்குழி, ரேஸ்கோர்ஸ்ரோடு, கேசவநகர், காஜாநகர், ஜே.கே.நகர், ஆர்.வி.எஸ்.நகர், சுப்பிரமணியபுரம், சுந்தர்ராஜ்நகர், ஹைவேஸ்காலனி, மத்திய சிறைச்சாலை, கொட்டப்பட்டு, பால்பண்ணை, பொன்மலைப்பட்டி, ரஞ்சிதபுரம், செங்குளம்காலனி, இ.பி.காலனி, காஜாமலை, தர்காரோடு, (கலெக்டர் பங்களா) மன்னார்புரம், அன்புநகர், அருணாச்சலநகர், காந்திநகர், டி.எஸ்.பி.கேம்ப், பாரதிமின்நகர், ஸ்டேட் பேங்க்காலனி, சிம்கோகாலனி, கிராப்பட்டிகாலனி, கிராப்பட்டி, காஜாமலை காலனி, பி அண்டு டி காலனி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

குணசீலம்
குணசீலம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட ஏவூர், அய்யம்பாளையம், ஆமூர், குணசீலம், வாத்தலை, மாங்கரப்பேட்டை, நெய்வேலி, கொடுந்துறை, மணப்பாளையம், நாச்சம்பட்டி, வீரமணிபட்டி, தின்ன கோணம், சித்தாம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவல் மின்வாரிய அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.