அங்கன்வாடி அருகே தேங்கி நிற்கும் மழைநீர்
திருச்சி, நவ. 17 திருச்சி முதலியார் சத்திரம் ஆலந்தெரு 50வது வார்டில் உள்ள அங்கன்வாடியில் அருகில் பாதாள சாக்கடை குழி நோண்டும்போது அதை சரியாக மூடாப்படவில்லை. அண்மையில் பெய்த மழை காரணமாக மழை நீர் அங்கு தேங்கியுள்ளது. இதனால் குழந்தைகளுக்கு சிக்கன்குனியா போன்ற பரவும் அபாய நிலை உள்ளது இதை மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. எனவே திருச்சி மாநகராட்சி உடனே தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.