துறையூரில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனி சாமி பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவி செல்லும் என்று உச்ச நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பு வழங்கியது இதனை கொண்டாடும் வகையில் துறையூர் சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு உறுப்பினர் சரோஜா இளங்கோவன் மற்றும் சிவசாமி மனோகரன் உள்பட கழக நிர்வாகிகள் முசிறி பிரிவு ரவுண்டானாவில் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்