குமரன்நகர் பகுதியில் நாளை மின்விநியோகம் நிறுத்தம்
திருச்சி நகரியம் கோட்டம் சீனிவாசநகர் பிரிவுக்கு உட்பட்ட குமரன்நகர் 4-வது கிராஸ், 5-வது கிராஸ், 10-வது கிராஸ் முதல் 19-வது கிராஸ் வரை உயரழுத்த மின்பாதைகளில் பழைய மின்கம்பிகளை அகற்றிவிட்டு அதிக திறனுடைய புதிய மின்கம்பிகள் மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் நாளை (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 3.30 மணி வரை மேற்கண்ட பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது.