கனமழையால் வயலில் புகுந்த மழைநீர் : பயிர்கள் சேதம்

0 431
Stalin trichy visit

கனமழையின் காரணமாக புதிய பாலம் உடைப்பு ஏற்பட்டதால் மழை நீர் வயலில் புகுந்து பயிர்கள் சேதம்

திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழையானது சுமார் 2 மணி நேரம் பெய்தது இதனால் செனப்பநல்லூர் கலிங்கமுடையான் பட்டி வெங்கடேசபுரம் ஆகிய பகுதியில் பெய்த கனமழையானது சித்திரப்பட்டி வழியாக ஐயாற்றில் சேருகிறது சித்திரப்பட்டியில் இருந்து கொல்லப்பட்டி செல்லும் சாலையில் புதியதாக பாலம் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது தற்போது பெய்த கனமழையின் காரணமாக பாலத்தில் பக்கவாட்டில் உடைப்பு ஏற்பட்டு மழை நீரானது வயல்வெளிகளில் சென்றதால் வயலில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்கள் நீரில் மூழ்கின்.

மேலும் மழைநீரில் ஏரிகளில் இருந்து அடித்து வரப்பட்ட மீன்கள் வயல் வரப்புகளில் துள்ளி குதித்தன இங்குள்ள பொதுமக்கள் வயல்களில் துள்ளி குதித்த சுமார் 2 கிலோ எடை உள்ள கெண்டை மீன்களை மகிழ்ச்சியுடன் பிடித்து எடுத்து சென்றனர் இங்குள்ள பொதுமக்கள் கூறுகையில் கோடைகாலத்தில் இதுபோன்ற இடியுடன் கூடிய கனமழையை இப்பகுதியில் பார்த்ததில்லை என்றும் மேலும் கோடை காலத்தில் வயல்களில் மீன்கள் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாகவும் கூறி வருகின்றனர்

Leave A Reply

Your email address will not be published.