வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்ற அருகே உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மாநகரச் செயலாளர் அன்பழகன், ஊராட்சிக் குழுத் தலைவர் தர்மன் ராஜேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்த், மாவட்ட துணைச் செயலாளர் முத்துச்செல்வம், பகுதி செயலாளர்கள் கண்ணன், மோகன்தாஸ், காஜாமலை விஜி, இளங்கோ, ஒன்றிய செயலாளர்கள் மாத்தூர் கருப்பையா, மல்லியம்பத்து கதிர்வேல் உள்ளிட்ட திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.