தொட்டியத்தில் நாளை மின்தடை
திருச்சி, ஜூலை 27 திருச்சி மாவட்டம், தொட்டியம் துணை மின்நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறப்படும், தொட்டியம், அரங்கூ, காமலாபுரம், பாலசமுத்திரம், தோளூபட்டி, எம்.புத்தூர், ஏலூர்பட்டி, எம்.களத்தூர், மேய்கல்நாயக்கன்பட்டி, தலமலைப்பட்டி, காட்டுப்புத்தூர், நத்தம், காடுவெட்டி, முருங்கை, ராமசமுத்திரம், உன்னியூ, கொளக்குடி, அம்மன்குடி, பூலாஞ்சேரி, அப்பணநல்லூர்மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது. இந்த தகவலை முசிறி மின்வாரிய செயற்பொறியாளா ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.