முதல்வர் சென்ற வேன் பஞ்சரானதால் பரபரப்பு
திருச்சி, ஜூலை 27 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்துவிட்டு தஞ்சாவூர் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற போது, திருவெறும்பூர் அருகே முதலமைச்சரின் வேன் டயர் திடீரென பஞ்சர் ஆனதால் சாலையில் நிறுத்தப்பட்டது. பின்னர் மாற்று காரில் முதலமைச்சர் தஞ்சாவூர் புறப்பட்டு சென்றார்.