பால்பண்ணை முதல் துவாக்குடி வரை அணுகுசாலை தொடர்பான ஆலோசனை கூட்டம்
திருச்சி, ஆக.8 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் இன்று பால்பண்மை முதல் துவாக்குடி வரையிலான அணுகுசாலை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மேயர் அன்பழகன், ஆணையர் வைத்திநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், மாநகர காவல் துணை ஆணையர் செல்வகுமார், தேசிய நெடுஞ்சாலை அதிகார திட்ட குழும மண்டல அலுவலர் அஜய்பிஸ்னாய் திட்ட இயக்குநர் செல்வகுமார் உள்பிட்ட பலர் உள்ளனர்.