திருவரங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு
திருச்சி, ஆக.8 பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 234/77 ஆய்வுப் பயணத் திட்டத்தின் கீழ் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி அவர்களின் திருவரங்கம் தொகுதியில் 67’ஆவது ஆய்வை மேற்கொண்டார்.

நாடு விடுதலை அடைவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட திருவரங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு பள்ளியின் மேம்பாட்டிற்கு நிர்வாகத்தினர் வைத்த கோரிக்கைகளை கேட்டறிந்து விரைவில் அதற்கான நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்தார்.