அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டி: அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்
திருச்சி, அக். 14 திருச்சி அண்ணா விளையாட்டங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் இன்று நடைபெற்ற பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன், மண்டல தலைவர் மதிவாணன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஆண்டனி ஜோயல் பிரபு மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உள்ளனர்.