மணப்பாறை அரசு மருத்துவமனை ரத்த பரிசோதனை பிரிவில் போதிய பணியாளர்களை நியமிக்க கோரிக்கை
திருச்சி, அக்.20 திருச்சி மாவட்டம், மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் செயல்பட்டுவரும் இரத்த பரிசோதனை நிலையத்தில் போதிய பணியாளர்கள் இல்லாமல் அவதிப்படும் பொதுமக்கள் உரிய நடவடிக்கை எடுத்து போதிய பணியாளர்கள் நியமனம் செய்ய மருத்துவ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மணப்பாறை சிபிஐ(எம்.எல்) நகர செயலாளர் பி.பாலு கோரிக்கை விடுத்துள்ளார்.