மஞ்சத்திடல் கிராமத்தில் புதிய நியாயவிலைக்கடை பயன்பாட்டுக்கு வந்தது : அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு பொதுமக்கள் நன்றி
திருச்சி திருவெறும்பூர் அருகில் காட்டூர் மஞ்சத்திடல் கிராமத்தில்சுமார் 250 குடும்பம் ரேஷன். பொருள் வாங்குவதற்கு மூன்று கிலோ மீட்டர் தொலைவு வரை செல்லும் அவல நிலையை அப்பகுதி மக்கள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம்கோரிக்கை முன்வைத்தனர் அதனடிப்படையில் தன்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டி தருவதாக வாக்களித்தார் நியாய விலை கடைக்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வயதானவர்கள் மூன்று கிலோ மீட்டர் தொலைவு செல்ல கூடாது என்று . கருத்தில் கொண்டு உடனடியாக மஞ்சதிடல் விவேக் நகரில் எட்டு லட்சம் ரூபாய் செலவில் நியாய விலை கடையை கட்டிக் கொடுத்தார் இதனால் நீண்டநாள் பிரச்சனை தீர்ந்து என்று அப்பகுதி கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தார் மஞ்சத்தில் கிராமத்தில் கடந்த பத்து வருட அதிமுக ஆட்சியில் பலமுறை அவர்கள் மனுக்கள் கொடுத்தும்யாரும் கண்டுகொள்ளவில்லைஅப்பகுதி கிராம மக்களின் கோரிக்கை உடனே ஏற்று திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அப்பகுதியில் நியாய விலை கடையை உடனே அமைத்திட தனது தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து 8 லட்சம் மதிப்பிலான நியாய விலை கடை 2019- 2020 ஆண்டில் கட்டிமுடிந்தார் தற்பொழுது பொதுமக்கள் பயன் பாட்டிற்கு இன்று திறந்துவைத்தார் . இந்த நியாயவிலை கடையை காட்டூர் பகுதி ஒன்றிய செயலாளர் நீலமேகம் இன்று பொதுமக்கள் பயன்பட்டிற்கு கொண்டுவரப்பட்டது அவருடன் திமுக நிர்வாகிகள் மற்றும் முன்னால் கவுன்சிலர் சிவசக்திகுமார் உடன் இருந்தார்