சவுக்கு சங்கர் மீது திருச்சியிலும் வழக்குப்பதிவு

0 391
Stalin trichy visit

திருச்சி, மே 8 பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் மீது கோவை காவல்துறையினர் வழக்குப்பதிவு, நீதிமன்ற காவலில் உள்ள நிலையில், தற்போது சவுக்கு சங்கர் மீது திருச்சியிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரபல யூ டியூபரான சவுக்கு சங்கர், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு நேர்காணல் அளித்திருந்தார். அதில், காவல்துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறான கருத்தை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இதுகுறித்து திருச்சியை சேர்ந்த பெண் காவலர் ஒருவர் கொடுத்த புகாரின்பேரில், திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசார், சவுக்கு சங்கர் மீது, ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண்களை இழிவுப்படுத்துதல், தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆகிய, ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.