நவல்பட்டு அருள்மிகு தீப்பாஞ்ச அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா
திருச்சி, ஜூன் 3 திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு வடக்கு தெருவில் அமைந்துள்ள அருள்மிகு தீப்பாஞ்ச அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது
கடந்த 29ஆம் தேதி காலை காவேரியில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து மாலை கோவில் வீடு பூஜை மற்றும் கணபதி ஹோமத்துடன் தொடங்கி தினமும் யாக சாலை பூஜை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து நேற்று நான்காம் கால பூஜை முடிந்து சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் மூலம் ராஜகோபரத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது.
இதில் நவல்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.