தீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரண உதவி – அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை பெரியமிளகுபாறை நாயக்கர் தெருவில் ஏற்பட்ட தீ விபத்தால் சேதமடைந்த ஜீவா சின்னதுரை வீட்டினை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு
நிவாரண உதவியாக ரூ. 20 ஆயிரமும், அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார். உடன் முன்னாள் துணைமேயர் அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.