கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது
திருச்சி, ஜூன் 26 திருச்சி ராம்ஜி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதிய காட்டூர் பகுதியில் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரவீன் குமாருக்கு கிடைத்த தகவலின் பெயரில் அப்பகுதியில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்ட போது அதே பகுதியைச் சேர்ந்த தர்மேந்திரா, யுவனியா ஆகிய இருவரும் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து 1.200 கிலோ மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.