புதிய வகுப்பறை கட்டிடங்கள் : சட்டமன்ற உறுப்பினர் சவுந்தரபாண்டியன் திறந்து வைத்தார்
திருச்சி, ஆக.8 இலால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் ₹28 இலட்சம் ரூபாய் செலவில்
புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கட்டப்பட்ட இரண்டு வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தார்..
இந்நிகழ்ச்சியில் ஒன்றியக்குழுத் தலைவர் ரசியா ராஜேந்திரன், கவுன்சிலர்கள் ஆரோக்கியமேரி , ஜீவானந்தம் , பேரூராட்சி தலைவர் ஆலீஸ் செல்வராணி ஜோசப் செல்வராஜ் , பள்ளி தலைமையாசிரியர், அரசு அலுவலர்கள் ,கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.