மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் : எம்.எல்.ஏ. சவுந்தரபாண்டியன் தொடங்கி வைத்தார்

0 172
Stalin trichy visit

திருச்சி, ஆக. 9 திருச்சி மாவட்டம்,  லால்குடி சட்டமன்ற தொகுதி, புள்ளம்பாடி ஒன்றியம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன்  இ.வெள்ளனூர் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட நிகழ்வை தொடங்கி வைத்து  பொதுமக்கள் அளித்த புகார்களை, கோரிக்கைகளை பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் விரைவில் தீர்வு காணும்படி வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் ரசியா ராஜேந்திரன் ,துணைத்தலைவர் கனகராஜ்,வெங்கடாசலபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மார்டின் , குமுளூர் ஒன்றிய குழு உறுப்பினர் பழனிச்சாமி மற்றும் அரசு அலுவலர்கள் ,கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.