மணப்பாறையில் தார்ச்சாலை அமைக்கும் பணி : அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்
திருச்சி, ஆக. 21 திருச்சி மாவட்டம், மணப்பாறை ஊராட்சி ஒன்றியம், மலையடிப்பட்டியில் நடைபெற்ற விழாவில் மலையடிப்பட்டி சாலை முதல் கல்பாளையத்தான்பட்டி சாலை வரை ரூபாய் 4 கோடி செலவில் தார்சாலை பலப்படுத்துதல் பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது,ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்கா தாரிணி, மணப்பாறை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்அமிர்தவள்ளி இராமசாமி, மலையடிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பாலகுமார் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.