ஊழல் தடுப்புத்துறை துணை கண்காணிப்பாளர் மணிகண்டனுக்கு அண்ணா பதக்கம்
திருச்சி, ஆக. 24 திருச்சி ஊழல் தடுப்பு துறை துணை கண்காணிப்பாளர் மணிகண்டனுக்கு முதல்வரின் அண்ணா பதக்கம்.
திருச்சி மாவட்டத்தில் அரசுத் துறையில் ஊழலை ஒழிப்பது தன் தலையாய கடமை என்று இரவு பகல் பாராமல், பாரபட்சம் காட்டாமல், தாம் சார்ந்த துறையாக இருந்தாலும் தயக்கம் காட்டாமல் தன் கடமையை கண்ணியத்துடன் சிறப்பாக பணியாற்றி வரும் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை காவல் துணை கண்காணிப்பாளர் மணிகண்டனுக்கு தமிழக அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான 2023ஆண்டிற்கான சீரிய பணியினை தமிழக அரசு அங்கீகரித்து தமிழக முதல்வரின் சிறப்பு பணிக்கான அண்ணா பதக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கி கெளரவித்துள்ளார் .