போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு
திருச்சி, அக். 7 வையம்பட்டியில் காவல் துறை சார்பாக பொது மக்களுக்கு போதைப் பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வையம்பட்டியில் காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு போதைப்பொருள் மற்றும் குற்றத்தடுப்பு விழிப்புணர்வு அளிக்கும் வகையில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடம் காவல்துறை அதிகாரிகள் விளக்கிக்கூறினர். அதேபோல் பல்வேறு கிராமங்களிலும் கிராம மக்களிடையே காவல்துறையினர் விழிப்புணர்வு ஏறாபடுத்தினர்