பகுதி நேர ரேசன் கடை திறப்பு
திருச்சி, அக்.9 திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம் நல்லூர் கிராமத்தில் இலால்குடி சட்டமன்ற உறுப்பினர் அ சௌந்தரபாண்டியன் தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து சுமார் 7 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பகுதிநேர ரேஷன் கடை கட்டிடத்தை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் ரஷ்யா ராஜேந்திரன் நல்லூர் சண்முகம் உலகநிதி பழனிவேல் சிறுகளப்பூர் தலைவர் மணிமாறன் தெரணிபாளையம் மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.