மணப்பாறையில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம்
திருச்சி, பிப்.25 திருச்சி மாவட்டம், மணப்பாறை, பொய்கைப்பட்டியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 77 ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அமைப்பு செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ. ஆசைமணி, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் , தலைமை பேச்சாளர் தீப்பொறி இராமலிங்கம், மருங்காபுரி வடக்கு ஒன்றிய கழக செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ. R.சந்திரசேகர், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. C.சின்னசாமி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மணப்பாறை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் N.அன்பரசன் செய்திருந்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கழக துணை செயலாளர் N.பொன்னுச்சாமி, மாவட்ட கழக பொருளாளர் நெட்ஸ் இளங்கோ, ஒன்றிய கழக செயலாளர்கள் N.சேது, PVK.C.பழனிசாமி, கன்னூத்து பொன்னுச்சாமி, மணப்பாறை நகர கழக செயலாளர் பவுன் ராமமூர்த்தி, பேரூர் கழக செயலாளர் A.திருமலை சாமிநாதன், பொதுக்குழு உறுப்பினர் SMKM.இஸ்மாயில், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் அம்மா பேரவை S.ராஜமணிகண்டன், இலக்கிய அணி TM.முருகன், மாணவரணி KPT.அழகர்சாமி மீனவரணி KCA.ஆறுமுகம், வர்த்தக அணி L.எத்திராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் T.காசிராமன் உள்ளிட்ட மாவட்ட கழக, ஒன்றிய, நகர, பேரூர், கிளை, வார்டு கழகங்கள் மற்றும் சார்பு அணிகளை சார்ந்த நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.