தாயுமான சுவாமி கோவில் தெப்பத்திருவிழா : அமைச்சர் அன்பில் மகேஸ் சாமி தரிசனம்
திருச்சி, ஏப். 12 திருச்சி அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோவில் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு பத்தாம் நாள் திருவிழாவான தீர்த்தவாரி மண்டபத்தில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் – பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி சாமி தரிசனம் செய்து மலைக்கோட்டை கோவில் யானை லஷ்மிக்கு பழங்களை வழங்கினார்.
இந்த நிகழ்வில் மாநகர கழகச் செயலாளர் மு.மதிவாணன், பகுதி கழக செயலாளர் மோகன், திருக்கோவில் உதவி ஆணையர் உமா, திருக்கோவில் அறங்காவலர்கள் சீனிவாசன், கருணாநிதி, ஸ்ரீதர், கலைச்செல்வி, கோவிந்தராஜ், திருக்கோவில் பேஸ்கார் பாஸ்கர், வட்ட செயலாளர்கள் சரவண செல்வன், உதயா ரபீக், இளங்கோ, சங்கர், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் இருந்தனர் .