தவறி விழுந்து முதியவர் சாவு
திருச்சி ஜூன்30 திருச்சி உறையூர் ராமலிங்க நகர் நெசவாளர் காலனி சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 79 ) இவர் கடந்த 27ந் தேதி சுப்பிரமணியம் வீட்டின் குளியல் அறையில் வழுக்கி விழுந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுசிகிச்சை பலனின்றி சுப்பிரமணியம் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.