மாணவ – மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய மாவட்ட ஆட்சியர்
திருச்சி, ஜுலை 17 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் வே. சரவணன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வார விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்.