பள்ளி மாணவி அறுவை சிகிச்சைக்கு உதவிட கோரிக்கை

0 185
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 23  திருச்சி மாவட்ட செந்தண்ணீர்புரம் மாநகாட்சி உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பில் படிக்கும் மாணவி உடல்நலம் சரியில்லாமல் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மாணவிக்கு  பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பணம் உதவி செய்தார்கள்.

செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பில் படிக்கும் கீர்த்தனா என்ற மாணவியிற்கு அவசர அறுவை சிகிச்சை செய்து ஆகவேண்டிய நிலையில், அவரின் தந்தை தினசரி கூலித் தொழிலாளியானவருக்கு, அறுவை சிகிச்சையிற்கு செய்வதற்கு போதிய பணம் வசதி நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் சார்பில் சிறிய அளவு பணம் உதவி செய்து உள்ளார்கள்.

மேலும் மாணவிக்கு உதவி செய்யும் மனம் உள்ளவர்கள் பள்ளி தலைமை ஆசிரியிடம் அல்லது மாணவி பெற்றோர் உதவியுடன் ஆஸ்பத்திரி சென்று உதவுங்கள் என்று  மக்கள் சக்தி இயக்கம்  கோரிக்கை வைத்துள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.