வருண்குமார் ஐ.பி.எஸ். குறித்து அவதூறு : சீமானுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீடிப்பு
திருச்சி, செப். 22 ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமாருக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிப்பு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தனக்கு எதிராக பொது வெளியில் சீமான் ஆதாரம் இல்லாமல் அவதூறு கருத்துகளை தெரிவிப்பதால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ரூ.2 கோடியே பத்து லட்சம் மான நஷ்ட ஈடு வழங்கவும் மனுவில் கோரிக்கை. திருச்சி சரக டி.ஐ.ஜி இருந்த வருண்குமாருக்கு எதிராக, சீமான் பேச இடைக்கால தடை விதித்திருந்தது இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது சீமான் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படாததால் விசாரணை அக்டோபர் 15 ம் தேதி தள்ளிவைப்பு அதுவரை இடைக்கால தடையும் நீட்டிப்பு.
தற்போது பணிமாறுதல் செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமார் சென்னையில் பணியில் உள்ளார்.