பஞ்சப்பூர் பேருந்து முனையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி பஞ்சப்பூர் கலைஞர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் பண்டிகை காலத்தை முன்னிட்டு அதிக அளவிலான பயணிகள் வருகையையொட்டி செய்யப்பட்டுள்ள முன்னேற்பாட்டு பணிகளையும், பேருந்து முனையத்தின் அனைத்து பகுதிகளையும் கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பபட்டுள்ள கண்காணிப்பு அறையின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பயணிகளுடன் கலந்துரையாடினார். இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் மதுபாலன், உதவி ஆட்சியர் (பயிற்சி) சேஷத்ரிமயும் தீபிசானு, நகர பொறியாளர் சிவபாதம், போக்குவரத்துறை அலுவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.