தீபாவளியை முன்னிட்டு தூய்மைப் பணியாளர்களுக்கு சீருடை -இனிப்புகள் : முசிறி எம்.எல்.ஏ. வழங்கினார்
திருச்சி, அக்.18திருச்சிராப்பள்ளி மாவட்டம் காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் தீபாவளி திருநாளை முன்னிட்டு பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் சீருடை மற்றும் இனிப்புகள் வழங்கினார்.
இந்நிகழ்வில் துணைத் தலைவர் சுதா சிவசெல்வராஜ் வார்டு உறுப்பினர்கள் பானுமதி, பழனிவேல், மாலதி, அன்னபூரணி, மணிவேல், இலஞ்சியம், ராஜ்குமார், குடிநீர் திட்ட பணியாளர் செயல் அலுவலர் கார்த்திகேயன் கண்ணன், கணினி பணியாளர் மதுசூதனன் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்