இளம்பெண் எரித்து கொலை : உடலை வாங்க மறுத்து போராட்டம்
திருச்சி, நவ.1 திருச்சியில் இளம்பெண் எரித்து கொலை உடலை வாங்க மறுத்து போராட்டம்
திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே மீரா ஜாஸ்மின் வயது 22 என்ற இளம் பெண் கொலை செய்து எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது கொலைக்கு காரணமான குற்றவாளிகளை கைது செய்திட வேண்டும் வன்கொடுமை வழக்கு பதிவு செய்திட வேண்டும் என உடலை வாங்க மறுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, வாலிபர் சங்கம் ,மாதர் சங்கம், மாணவர் சங்கம் மற்றும் உயிரிழந்த பெண்ணின் உறவினர்களோடு சாலை மறியல் போராட்டம் நடத்தி காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் இன்னும் ஒரு மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உங்களுக்கு உரிய தகவல் கொடுப்பதாக சொல்லியதன் பேரில் சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டு தற்பொழுது அரசு மருத்துவமனை வளாகத்தில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது